மத்திய கிழக்கில் உள்ள இலங்கையருக்கு வெளியான அறிவித்தல்
பஹ்ரைன்,குவைத் மற்றும் ஐக்கிய இராச்சிய நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அனைத்து இலங்கை மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த தூதரங்கள் தெரிவித்துள்ளன.
அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வழிகளின் மூலம் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள - தொலைபேசி மற்றும் WhatsApp: 33530290
ஜி.எம்.டி. தரங்கிகா Attaché : (+973) 3597 0290 / (+973) 3510 6301
கோதமி (தொழில் அதிகாரி): (+973) 3371 2875
குவைத் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள: WhatsApp வசதியுடன்: +965 65845646 WhatsApp வசதியுடன்: +965 66503544 நிலையான தொலைபேசி (Landline): +965 25354611 (அழைப்புகளுக்கு மாத்திரம்) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE): அவசர காலங்களில் பணியகத்தைத் தொடர்புகொள்ள: WhatsApp: +94 71 980 2822 அவசர அழைப்பு இலக்கம்: 1989
அதேபோன்று அவசரத் தேவை ஏற்படின், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் +971 50 931 8538 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |