சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா பயணம்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி குழுவின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவொன்று வொஷிங்டன் பயணமாகியுள்ளது.
நாளை திங்கட்கிழமை வொஷிங்டனில் ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிதிகள் குழுவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை வகிக்கின்றார்.
அரசாங்கத்தின் பிரதிதிகள் குழு
சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
கொவிட் தொற்றுநோய், உக்ரைனில் போர், பணவீக்கம், பலவீனமான சீனப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கு மத்தியில் அதிகாரிகள் இந்தச் சந்திப்பை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
