25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளுக்காக மோப்ப நாய்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் ரகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாய் குட்டியின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் என காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காவல்துறை விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்ய உள்ளது.
காவல்துறை திணைக்களம் கடந்த 2019 ஆம் அண்டுக்கு பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை கொள்வனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண் மற்றும் பெண் நாய்கள் ஊடாக குட்டிகளை பெற்று, அவற்றை காவல்துறை துறையில் பல பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை திணைக்களம் கூறியுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
