மீண்டுமொரு குண்டுத்தாக்குதல் ? ஞானசாரதேரர் தெரிவித்தது என்ன?
இலங்கையில் மீண்டும் ஒரு குண்டுத்தாக்குதல் இடம்பெறப்போவதாக தமது அமைப்பின் பொதுச் செயலாளர் ஒருபோதும் தெரிவிக்கவில்லையென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் ஊடனகப்பரிவு வெளியிட்ட தகவலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதலைப் போல மற்றுமொரு அடிப்படைவாத தாக்குதல் இடம்பெறலாம். எனவே தேசிய பாதுகாப்பை பலப்படுத்துமாறு தேரர் தெரிவித்தாரே தவிர குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென உறுதியாக தெரிவிக்கவில்லை.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஞானசார தேரர் தனது ஒத்துழைப்பு வழங்குவார்.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.