நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பதவியைத் துறந்தாரா?? - வெளிவந்த தகவல்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
காரணம் இல்லாமல் இராஜினாமா செய்யவில்லை எனவும் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் காரணங்களை தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 20 வருடங்களுக்கு மேலாக அந்த சபையில் பணிப் புரிந்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பது கடினம் என கருதி பதவி விலகல் கடிதத்தை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் தான் இராஜினாமா செய்யவில்லை என அவர குறிப்பிட்டுள்ளார்.