கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் அதிரடியாக கைது
கிராண்ட்பாஸ் (Grandpass) காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி நாகலகம் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சந்தேக நபர், நேற்று (23) கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன், சந்தேகநபரிடமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக ஒரு பெண் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்கள் இதுவரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 12 மணி நேரம் முன்
