யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று (09) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்புத்துறையை சேர்ந்த 42 வயதான தங்கவடிவேலு பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ் தொடருந்து நிலையம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புற்றுநோய் வியாதியால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவைக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
பின்னர் அவரது சடலமானது யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு தொடருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |