இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னி வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற நிதி தூய்தாக்கல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா தெரிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழர்கள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வன்னி வைப்பகங்களில் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர்.

இறுதி யுத்தத்தின் போது, இந்த நகைகள் அடங்கிய கொள்கலன்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினர் பொறுப்பேற்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பலமுறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் ”என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |