மற்றுமொரு உறுதிமொழியை நிறைவேற்றும் தம்மிக்க பெரேரா
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Dhammika Perera
By Sumithiran
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சர் தம்மிக்க பெரேரா உறுதியளித்த மற்றுமொரு விடயத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, நாட்டில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சிரமங்களை நீக்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
24 மணி நேரத்திற்குள் அனுமதி
முன்பெல்லாம் முதலீடுகளுக்கு விண்ணப்பம் அனுப்பும் போது பல பக்கங்களை நிரப்ப வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது அதை ஒரு பக்கமாக குறைத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒரு முதலீட்டாளர் முதலீட்டுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்தால் 24 மணி நேரத்திற்குள் அனுமதி அளிக்கும் அமைப்பை அமைச்சர் தயாரித்துள்ளார்.
