வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அறிவித்தல் பலகைளிலும் மற்றும் சுவர்களிலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.
பல்வேறு வாசகங்கள்
வவுனியா மாநகர மக்களே ஊழல்வாதிகளுக்கு துணை நிற்காதீர், ஊழல் புரிவது நீங்கள் பாதிக்கப்படுவது மக்களா?, சொகுசு வாழ்க்கை உங்களுக்கு சுமை மட்டும் மக்களுக்கு, லஞ்சம் பெறுவது நீங்கள் பாதிக்கப்படுவது மக்கள் என பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளே நகரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் குறித்த பதாதைகளில் யாரால் காட்சிப்படுத்தப்பட்டது என உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதுடன் வடக்கு ஆளுனரால் வவுனியா மாநகரசபை மேயர் பதவி நீக்கத்திற்கு எதிராக கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்வற்றுக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில் இப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑செய்திகள் - Gokul
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 11 மணி நேரம் முன்