புலம்பெயர்ந்த தமிழர்களின் தாளத்திற்கு ஆடும் அரசு : நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
அரசுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் மூலதன அனுகூலங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05.01.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கரிநாள் போராட்டம்
78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க.

ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை. நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறிக் கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர்களுடனான உறவு
தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு செய்ய முடியாது.

நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறிக் கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.
உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |