மன்னாரில் காற்றாலைகளை நிறுவுவதில் அநுர அரசு உறுதி

Sri Lankan Tamils Mannar Anura Kumara Dissanayaka
By Jaso Oct 09, 2025 10:24 PM GMT
Report

ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினேன்.எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை (9) மாலை சர்வமத குழு,பொது அமைப்புக்கள்,போராட்டக்குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்தித்தேன்

நான் ஜனாதிபதியை சந்தித்தேன்.இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். ஜனாதிபதியை சந்திப்பதற்கு நான் அரச அதிபரோடு இணைந்து இந்து மற்றும் இஸ்லாமிய மத குருக்களையும் அழைத்துச் செல்வதாக இருந்தோம்.

மன்னாரில் காற்றாலைகளை நிறுவுவதில் அநுர அரசு உறுதி | Anura Gover Establishing Wind Turbines In Mannar

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் ஜனாதிபதியை மூன்றாவது தடவையாக சந்தித்தேன்.முதல் தடவையாக தனியாகவும்,இரண்டாவது தடவையாக ஆயர் மன்றத்துடன் இணைந்து சென்று சந்தித்தோம்.

 இந்த பிரச்சினையை நான் இலங்கை ஆயர் மன்றத்திற்கும் எடுத்துச் சொன்னேன்.இலங்கை ஆயர் மன்றம் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்.கருதினால் முன்னெடுப்பாலும் ஆயர் மன்ற தலைவர் ஆகியோரினால் உடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பிற்கும் சென்றேன்.

இறுதியாக கடந்த 2 தினங்களுக்கு முன் ஜனாதிபதியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அனைவரோடும் இணைந்து செல்வதாக இருந்தும் அந்த செயல்பாடு எனக்கு கைகொடுக்கவில்லை.

14 காற்றாலைகளை மன்னாரில் அமைப்பதில் உறுதி

இருந்தும் நான் தனியாக சென்று குறித்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.

மன்னாரில் காற்றாலைகளை நிறுவுவதில் அநுர அரசு உறுதி | Anura Gover Establishing Wind Turbines In Mannar

 நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.நான் எங்களுடைய மக்களின் நிலைப்பாட்டையும்,மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினேன்.

எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை அவர் மீண்டும், மீண்டும் கூறினார்.

கனிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை

கனிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

 அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய தீவில் கனிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை.அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார்.

மன்னாரில் காற்றாலைகளை நிறுவுவதில் அநுர அரசு உறுதி | Anura Gover Establishing Wind Turbines In Mannar

எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பிற்பாடு இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன்.நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை.

எனினும் உண்மைக்கு புறம்பான செய்திகள் இணைய ஊடகங்களில் வெளி வந்துள்ளது.

 நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.தாங்களாகவே ஊகித்து வெளியிட்ட செய்தியாக அமைந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுடனும்,மக்களுடனும் இன்னும் கலந்துரையாட வேண்டி உள்ளது.அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவோம்.என மேலும் தெரிவித்தார்.

காற்றாலை விவகாரம்: யாழ் - வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு எழுந்துள்ள சவால்

காற்றாலை விவகாரம்: யாழ் - வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு எழுந்துள்ள சவால்

அத்துமீறி மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

அத்துமீறி மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல்

தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026