சட்டமா அதிபரை பதவி விலகுமாறு அநுர அரசு அழுத்தம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Government Of Sri Lanka Dayasiri Jayasekara
By Sathangani Feb 09, 2025 07:14 AM GMT
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickramatunga) கொலை தொடர்பில் சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் சூழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் சட்டத்துறையில் அரசியல் தலையீடு செலுத்தாமல் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) இடமளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

கொழும்பில்  (Colombo) நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு : வெளியான காரணம்

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு : வெளியான காரணம்

கோட்டாபயவின் ஆட்சிக் காலம்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அந்த வகையில் எந்தவொரு வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறும் உத்தரவிடவும் முடியாது.

சட்டமா அதிபரை பதவி விலகுமாறு அநுர அரசு அழுத்தம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு | Anura Govt Pressures Attorney General To Resign

நல்லாட்சி அரசாங்கத்தில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் அந்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக லசந்த கொலை தொடர்பில் நல்லாட்சியின் போது விசாரணைகளை முன்னெடுத்ததைப் போன்று, அந்த நடவடிக்கைகளை தற்போது மீண்டும் ஆரம்பிக்குமாறு ஷானி அபேசேகரவைக் கோருகின்றோம். 15ஆண்டுகளின் பின்னராவது லசந்தவுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அநுர அரசின் நடவடிக்கை

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அநுர அரசின் நடவடிக்கை

 நம்பிக்கையில்லா பிரேரணை

இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் அரசாங்கம் சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கான சதித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதற்காக லசந்தவின் மகள் சட்டமா அதிபருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருமாறு எழுதிய கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முற்படுகிறது.

சட்டமா அதிபரை பதவி விலகுமாறு அநுர அரசு அழுத்தம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு | Anura Govt Pressures Attorney General To Resign

சட்டமா அதிபருக்கு அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது முற்று முழுதாக தவறான விடயமாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனை விடுத்து சட்டமா அதிபர் திணைக்கள செயற்பாடுகளை அரசியல் மயமாக்குவது பொருத்தமற்றது.

லசந்தவின் மகள் மற்றும் மனைவியைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாம் இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்ததால் தான் அரசியல் நெருக்கடிகளின் போது வன்முறைகளால் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீட்டு பெயர் பட்டியலை வெளியிட்டு அரசாங்கம் மக்களை திசை திருப்புகிறது. ” என தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை : சட்டமா அதிபரை சாடும் சுமந்திரன்

லசந்த விக்ரமதுங்க படுகொலை : சட்டமா அதிபரை சாடும் சுமந்திரன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025