முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்...! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு இந்த அறுவுருத்தலை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இடம்பெற்றது.
உள்ளூராட்சி அமைச்சு
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு உட்பட்ட அரச நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவினம் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபாய் மீளாவெழும் செலவினங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய ரீதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக (Development Units) மாற்றுவதற்கான திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலதிக வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |