இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்!

Sri Lanka Army Tamils Jaffna Protest
By Independent Writer Aug 02, 2026 10:04 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வயாவிளான் சந்தியில் இன்று (02) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜரும் கையளித்துள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட மக்கள் 36 வருடங்கள் கடந்தும், அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

மகஜர் கையளிப்பு 

குறித்த பகுதிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளுக்கு திரும்ப முடியாத நிலையில், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்! | Protest For Army Controlled Land Release In Jaffna

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாக தம்மை தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராடி வரும் நிலையில் வலி. வடக்கை சேர்ந்த மூன்று கிராம மக்கள் தமது காணிகளை விடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில், மயிலிட்டி கிராம மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுகிழமைகளிலும் போராடி வரும் நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வயாவிளான் மக்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தின் முடிவில், வயாவிளான் பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடாக யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜர் கையளித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!

மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!

ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் 

அத்துடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்! | Protest For Army Controlled Land Release In Jaffna 

ஏற்கனவே மயிலிட்டி பகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் சுமார் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன், பு.கஜிந்தன் 

மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்

மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016