மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்படும்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

கவலரத்தினால் சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளது.
குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்“ என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |