மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை
மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று மதியம் (01) மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை பணியில்
நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை விசேடஅதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றி கூடியுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விமானப்படை கண்காணிப்பு
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது, மேலும் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |