அநுரவின் நடுநிலைமை கதையோ முன்னணி! அமெரிக்க ஹெலிகள் கொழும்புக்கு பறப்பதோ பின்னணி!!
மத்திய கிழக்குப்போரால் அடுத்து இலங்கையில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என இலங்கையர்களுக்கும் கலவரம் தொற்றிவிட்ட நிலையில் இப்போதைக்கு அஞ்சற்க மக்களே! எல்லாம் சரியாகும்! 2022 போல ஒரு நெருக்கடி சிஸ்ரம் வராது கவலை வேண்டாம் என சிஸ்ரம் சேஞ் அனுர நேற்றிரவு நாட்டு மக்களை தனது உரை மூலம் ஆசுவாசப்படுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் என்ன எண்ணெய் கிணறா உள்ளது நாட்டுமக்களுக்கு இறைக்க என சலித்துக்கொண்ட அனுர இறுதியில் இலங்கையரை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சிறப்பு ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்து அதில் ஒருமணிநேரம் கடந்து உரையாற்றி அதில் சில அபயங்களை வழங்கினார்.
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் வார்த்தைஜாலோன் என்றால் அதில் முதன்மையானவர் அனுர என்பது தெரிந்தவிடயம் அவரது வார்த்தை ஜால உரைகள் தான் அவரை சிங்களமக்கள்மத்தியில் பிரபலமாக்கி அவருக்கு ஆட்சிப்பொறுப்பையும் வழங்கிய நிலையில் அவரது மக்களே அஞ்சற்க அபயம் வந்துள்ளது.
அனுர நேற்றைய தனது உரையிலும், இலங்கை ஒரு நடுநிலைமை நாடென்பதால் அது இந்தப்போரில் தரப்புக்கும் சாயாது எந்தப் பக்கமும் சாராது என சொல்லிக்கொண்டாலும் அவரது இந்த நடுநிலைமை கருத்து வந்த நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 10 உலங்குவானுர்த்திகளும் கொழும்பை நோக்கி செல்வதாக வோசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதர் மஹிந்த சமரசிங்கவின் கருத்தும் வந்தது.
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சி சுயலாபங்களுக்காக ஒப்பீட்டுரீதியில்இந்திய அமெரிக்க சாய்வுகொண்ட ஒரு ஆட்சித்தரப்பு என்ற தோற்றப்பாடு உள்ள நிலையில் உள்ளுர் நிலவரங்களையும் ஹோர்மூஸ் நீரிணையை மையப்படுத்திய பங்கர்- பேஸ்டர் குண்டுகளின் அள்ளிவீச்சுகளையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு..