ரணில் - மொட்டு அரசிற்கு பதவி ஆசை ; இவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் - அனுர
"நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர்.
ஆகவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்."
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதவி ஆசை
அவர் மேலும் கூறுகையில்,
"ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் பதவி மீது ஆசை, மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி மீது ஆசை.
தற்போது பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி பிளவடைந்துள்ளது.
மக்கள் ஆணையை இழந்துள்ள ரணில் – மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது.
இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட பதவி வகிக்க தகுதியற்றவர்கள்.
ஆகையால் புதிய மக்கள் ஆணை வேண்டும், புதிய அரசு மாற வேண்டும், எனவே, நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்." என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
