BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்
இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை , பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு , இன்று (08.08.2025) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
991 BYD ரக மின்சார வாகனங்கள்
அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களின் வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரசு வங்கிக்கு உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
அந்த உத்தரவாதத்திற்குப் பொருந்தக்கூடிய வட்டியை மனுதாரர் நிறுவனம் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில், இந்த வாகனங்களை விடுவிப்பது தொடர்பாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தனது உடன்பாட்டைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 1 மணி நேரம் முன்
