ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி

Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order
By Raghav Jul 24, 2025 01:57 AM GMT
Report

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதன் உண்மையான சாட்சியங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுக்கும் பிரதான தரப்பு யார்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் (Nizam Kariapper) கேள்வி எழுப்பியுள்ளார். 

நேற்று (23.07.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கையைக் கோடிட்டுக் காட்டி அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். 

அதிகரிக்கும் சிக்குன்குனியா - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

அதிகரிக்கும் சிக்குன்குனியா - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் 

இதன்படி, குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி | April 21 Attack Pillayan And Suresh Saleh Arrested

அத்துடன், அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கோ அல்லது அவர்களைக் கைது செய்வதற்கோ இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

புலனாய்வு அதிகாரிகள்

அதேநேரம், 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் களவாடப்பட்டமை தொடர்பில், 2015ஆம் ஆண்டே இராணுவத்தின் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி | April 21 Attack Pillayan And Suresh Saleh Arrested

அவ்வாறான தகவல்களுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் ஏப்ரல் 21 தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அவ்வாறான புலனாய்வு அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025