ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி

Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order
By Raghav Jul 24, 2025 01:57 AM GMT
Report

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதன் உண்மையான சாட்சியங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுக்கும் பிரதான தரப்பு யார்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் (Nizam Kariapper) கேள்வி எழுப்பியுள்ளார். 

நேற்று (23.07.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கையைக் கோடிட்டுக் காட்டி அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். 

அதிகரிக்கும் சிக்குன்குனியா - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

அதிகரிக்கும் சிக்குன்குனியா - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் 

இதன்படி, குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி | April 21 Attack Pillayan And Suresh Saleh Arrested

அத்துடன், அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கோ அல்லது அவர்களைக் கைது செய்வதற்கோ இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

புலனாய்வு அதிகாரிகள்

அதேநேரம், 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் களவாடப்பட்டமை தொடர்பில், 2015ஆம் ஆண்டே இராணுவத்தின் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி | April 21 Attack Pillayan And Suresh Saleh Arrested

அவ்வாறான தகவல்களுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் ஏப்ரல் 21 தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அவ்வாறான புலனாய்வு அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021