பிள்ளையானுக்காக நாடாளுமன்றில் கவலை தெரிவித்த அர்ச்சுனா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரேரணையானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நண்பரினாலேயே நாடாளுமன்றம் வரை கொண்டுவரப்பட்டது எனவும், அவரின் நிலையை என்னி கவலைப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இதுபோலவே அரசியலிலும் சிக்கல்கள் உருவாகியவுடன் அரசியல்வாதிகள் மக்கள்மயப்பட்டு குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக முன்வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இது ஒரு அரசியல் நாடகம் என தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு பிரேரணையின் போது மேற்கண்ட கருத்துக்களை கூறியுள்ளார்.
அத்தோடு இலங்கை தமிழரசுக்கட்சியானது ஜே.வி.பி அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியல் செய்வது கீழ்தரமான ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நாடாளுமன்றில் தமிழ் எம்.பிக்களின் கருத்துக்களை கேட்டு வாக்களித்தால் தமிழினம் தொடர்ந்தும் அழிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
