அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அண்மைக்கால செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி வளர்த்து விட்டவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களும் புலம்பெயர்ந்த மக்கள் சிலருமே என சண் மாஸ்டர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதியின் காவலனாக அவர் குரல் கொடுக்கின்றார் என அர்ச்சுனாவை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களுக்கு கொஞ்ச நாட்களில் அவருடைய உண்மை முகம் அம்பலப்பட்டு விட்டது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்கள் பிரச்சினையை மையப்படுத்தி வீதிக்கு வந்த அவரை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். ஆனால் அதற்கு பின்னர் அவருடைய செயற்பாடுகள் கருத்தியல் ரீதியாக ஏராளமான முரண்பாடுகளைத் தோற்றுவித்தன.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தாயகத்தில் காணிப் பிரச்சினை ஒன்றுக்காக தனது துப்பாக்கியை காட்டி பெண்ணொருவரை மிரட்டியிருந்தார்.
உணர்ச்சி வசப்பட்டு ஒரு உளவியல் நோயாளி மாதிரி கைத்துப்பாக்கியை கையில் எடுத்து மிரட்டுபவருக்கு அருகில் இருக்க முடியாது. அந்த இடத்தில் அவருடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |