காரை தலையிலா நிறுத்துவது! காவல்துறையினரை முட்டாள் என திட்டிய அர்ச்சுனா!
கொழும்பில் (Colombo) கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வி எழுப்பும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பில் மிக பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில், காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை அப்போது கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் விளக்கம் கோரியுள்ளனர்.
இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்ட கேள்விக்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என காவல் அதிகாரியிடம் கேள்வி எழுப்புவது காணொளியில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் காணப்படும் வீதி கோவை சட்டத்துக்கு அமைய பேருந்து நிறுத்துமிட்டத்தில் இருந்து ஒரு வாகனம் சரியாக 20 மீ்ற்றருக்கு அப்பாலே நிறுத்தப்படவேண்டும்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பேருந்து தரிப்பிடத்திலேயே வாகனத்தை நிறுத்தி வைத்தமை காணொளியில் பதிவாகியுள்ளதோடு, கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் கோரிய போக்குவரத்து பொலிஸாரையும், அர்ச்சுனா குறித்த பகுதியில் தனது காரை நிறுத்தியது மாத்திரமல்லாது, கடமையில் ஈடுபட்ட காவல் அதிகாரியிடம் முரணாக பதில் வழங்கியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
