உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை அடுத்த மற்றுமொரு நாடும் வெளியேறியது
உலக சுகாதார அமைப்பிலிருந்து தனது நாடு விலகுவதாக ஆர்ஜன்ரீன(Argentina) ஜனாதிபதி ஜேவியர் மில்லா(Javier Milla) அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முந்தைய கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்பின்(who) பலவீனங்களே தனது முடிவுக்கான காரணம் என்று குறிப்பிட்ட ஆர்ஜன்ரீன ஜனாதிபதி, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கோவிட் தொற்றுநோய் மனித வரலாற்றில் மிக மோசமான குற்றமாக விவரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தீங்கு விளைவிக்கும் அமைப்பு
உலக சுகாதார அமைப்பு வரலாற்றில் மிகப்பெரிய சமூகக் கட்டுப்பாட்டு பரிசோதனையை மேற்கொண்ட ஒரு தீங்கு விளைவிக்கும் அமைப்பு என்று ஆர்ஜன்ரீன ஜனாதிபதி சமூக ஊடகங்களில் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவும் விலகுவதாக டொனால்ட் ட்ரம்ப்(donald trump) முன்னர் அறிவித்தார், மேலும் ட்ரம்பின் ஆதரவாளரான ஆர்ஜன்ரீன ஜனாதிபதியின் முடிவு ஆர்ஜன்ரீனாவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும் அந்நாட்டின் எதிர்க்கட்சியும் உலக சுகாதார அமைப்பும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |