ரணில் தரப்பில் இருந்து விலகும் முக்கிய புள்ளி
unp
ranil wickremesinghe
arjuna ranatunga
By Vanan
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க (Arjuna Ranatunga) ஐக்கிய தேசியக் கட்சியில் விலகும் தீர்மானத்தை கட்சித் தலைமை ரணில் விக்ரமசிங்கவிடம் ( Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய தோல்வியை சந்தித்ததாகவும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வசம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
இதனால், கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் எவ்வித பயனும் கிடையாது என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.