சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவை கைது செய்ய உத்தரவு!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கையூட்டல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிணை கோரிக்கை
இந்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவினால் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கடந்த ஐந்தாம் திகதி கபில சந்திரசேனவிற்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
ஊழல் விசாரணை
இந்தநிலையில் கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து வழக்கு விசாரணை முடியும் வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அத்தோடு கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |