அநுர அரசு தொடர்பில் ரணிலிடம் பலர் எழுப்பும் கேள்வி
Ranil Wickremesinghe
Sri Lanka
NPP Government
By Sumithiran
தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளைப் பின்பற்றுகிறதா என்பது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தில் உள்ளவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று இன்று(04) கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்ட அதே கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, "இதைத்தான் பலர் என்னிடம் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அரசாங்கத்திடம் இருந்து எழுப்ப வேண்டும்" என்றார்.
நிலைமை நன்றாக இருக்கிறதா இல்லையா அரசிடம் கேளுங்கள்
இன்று கொழும்பில் நடைபெற்ற கிரிட்எக்ஸ் ஸ்டெம் சேலஞ்ச் தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
புதிய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், நிலைமை நன்றாக இருக்கிறதா இல்லையா என்று அரசாங்கத்திடம் கேட்க வேண்டியிருக்கும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி