பிரிட்டன் எம்.பி படுகொலை - சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் ஆழ்ந்த இரங்கல்
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமஸ்(Sir David Amess's)கொல்லப்பட்டதை அறிந்து மிகவும் ஆழ்ந்த துயரடைவதாக சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்விக்கூடத்தின் தலைமை அதிகாரி லோகேந்திரன் தயாபரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சேர் டேவிட் அமஸின் இிப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கல்விக்கூடம் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
டேவிட், தமிழர்களுக்கு மிகவும் சிறந்த நண்பராக விளங்கினார்.குறிப்பாக எமது கல்விக்கூடத்துடன் மிகவும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்தார்.அவர் எமக்கு செய்த உதவிகளுக்காக நாம் எப்போதும் அவருக்கு நன்றியுடையவர்களாக கடமைப்பட்டுள்ளளோம்.
எனவே இந்த நேரத்தில் எமது துயரை வெளிப்படுத்தி நிற்கின்றேம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.