ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை!! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தகம்!!

Assassination of Rajiv Gandhi: An Inside Job?'
By Independent Writer Aug 12, 2021 02:52 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
105 Shares

'ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார்.

அந்த நூலின் பெயர: Assassination of Rajiv Gandhi: An Inside Job?'

ஃபராஸ் அஹ்மது என்பவர் சாதாரண ஒரு எழுத்தாளர் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயனியர், டெக்கான் கிரானிக்கில், தி ஆசியன் ஏஜ் மற்றும் ட்ரிபியூன் போன்ற முன்னணி ஊடகங்களில் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றியவர்.

இதுவரை ராஜீவ் காந்தி கொலை குறித்து வந்த நூல்கள் யாவும் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குறித்தோ, அல்லது SIT கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் தங்களின் புலனாய்வு குறித்தோ எழுதப்பட்டவை .

ஆனால், இந்த நூல்தான் முதன்முறையாக புலனாய்வு, குற்றச்சாட்டப்பட்டவர்களின் வாதம் தாண்டி, அனைத்திற்கும் மேலாக அதன் பின்னே இருக்கும் 'அரசியல்' குறித்து தெளிவாக விவரிக்கிறது.

இந்த நூலில் அவர் 'இப்படி' துவங்கி 'இப்படியே' முடிக்கிறார். அதாவது, எந்த ஒரு காவல் அமைப்பும், புலனாய்வு நிறுவனமும் அதிமுக்கிய கொலைகளை விசாரிக்கும் போது, கொலைக்கு பின்னே இருக்கும் கொலையாளிகளின் நோக்கம், கொலை செய்ய ஏற்படும் தூண்டுணர்வு (motivation), கொலையால் கிடைக்ககூடிய ஆதாயம்.. இவற்றை ஆராயாமல் எந்த ஒரு குற்ற விசாரணையையும் நிகழ்த்த முடியாது, துப்பு துலக்குவதில் வெற்றியும் கிட்டாது என்கிறார்.

ராஜீவின் கொலையை அந்த நோக்கில் ஆராயும்போது... ஆதாயமடைந்தவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதை ராஜீவுக்கு பிந்தைய கடந்த இரு தசாபத்ங்களின் அரசியல் போக்கில் பார்க்க முடிகிறது.

ராஜீவ் இறக்கும் முன்னர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாமல் இருந்த ஒரு கும்பல் இன்று பாராளுமன்ற அரசியலை மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. கொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அல்லது ஜெயின் மற்றும் வர்மா கமிஷனால் சந்தேக நிழல் படிந்த.. நரசிம்மராவ் துவங்கி சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, டி என் சேஷன், நாராயணன், மார்கரெட் ஆல்வா, மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்களும்.. விசாரணையை திட்டமிட்டு குழப்பி, திசை திருப்பிய அதிகாரிகள் எண்ணற்றோர் தங்கள் புரொஃபஷனில் உச்சத்திற்கு செல்கிறார்கள்.

குறிப்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு (SIT) கார்த்திகேயன், ராகவன் பிற்காலத்தில் சிபிஐ தலைவராகிறார். இவர்தான் பின்னர் குஜராத் படுகொலைகளில் மோடிக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்தவர். அந்த ராகவன் தற்போது சைப்ரசுக்கான இந்தியாவின் ஹை கமிஷனர்.

மற்றொரு அதிகாரி Radhavinod Raju பின்னர் NIA வின் தலைவரானார்.

ஆமு நாராயணன் NSA தலைவராகி, பிரதமரின் சிறப்பு ஆலோசகராகி, பின்னர் வங்காள கவர்னர் ஆனார்.

ராஜீவ் கொலை விசாரணையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தத்தமது வாழ்வின் உச்சத்தை தொட்டது கொலையின் சூத்திரதாரிகளை காப்பாற்றியதற்காக கிட்டிய பரிசா?

அதேவேளை, புலிகளுக்கு ராஜீவின் இறப்பால் ஏற்பட்ட ஆதாயம் என்று ஏதுமில்லை. மாறாக பெரும் இழப்பே மிச்சம்.

ஏனெனில்இ சோதனைக் காலங்களில் புலிகளின் பதுங்கு அரண் தமிழ் நாடு. புலிகளின் 'இதயத்துடிப்பு' தமிழர்களின் புலிப்பற்று. ராஜீவ் கொலையால் அது முற்றிலும் நின்று விட்டது. தமிழ்நாடு தொடர்பறுந்தால், இன்றல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் எதிரிகளிடம் இலகுவாக expose ஆகிவிடுவோம் என்பதை யூகிக்கத் தெரியாத இயக்கமல்ல புலிகள் இயக்கம்.

அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொன்றதற்கு பழிக்கு பழியாக ராஜீவை கொன்றார்கள் என்ற இந்திய அதிகார வர்க்கத்தின் சொத்தை வாதத்தை ஆய்வு செய்தால்.. ஒரு தேசத்தை கட்டி எழுப்ப பெரும் கனவுடன் முப்படை கட்டி வீரச் சமர் புரியும் ஒரு விடுதலை இயக்கம்... போஃபர்ஸ் ஊழலில் சிக்கி பல்லு புடுங்கப்பட்டு, ஆட்சியை இழந்து, மண்டல கமிஷனால் விபி சிங்கிடம் தன் வசீகரத்தையும் இழந்த ஒரு தனி நபர் ராஜீவின் பின்னால்.. அவரின் உயிருக்கு குறி வைத்து, படை அனுப்பி, கொலைசெய்ய காத்திருக்கும் சிறுபிள்ளை விளையாட்டை செய்யும் என்பதை உலக அரசியல் தெரிந்த எவரும் நம்ப மாட்டார். (ராஜா வீட்டு கன்றுக்குட்டி ராஜீவுக்கு தவறான ஆலோசனை வழங்கிஇ அமைதிப்படையை வைத்து புலிகளை அழிக்க ஒரு 'வர்க்கம்' முயல்வதை, அமைதிப்படையே பிரபாகரனிடம் விளக்கி இருக்கிறது).

SITகார்த்திகேயன் தரப்பு மற்றும் சுப்பிரமணியசாமி தரப்பு உளவு மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்புவது போல .. ராஜீவ் மீண்டும் ஆட்சிக்கு வந்து அமைதிப்படை அனுப்புவார் என்று புலிகள் பயந்தார்கள் என்பதும் பொருளற்ற வாதம்.

ஏனெனில்

1. ராஜீவின் செல்வாக்கு அதள பாதாளத்தில் இருந்தது. அவர் ஜெயிக்க வாய்ப்பேயில்லை. ராஜீவ் இறந்த பின்னரும், அந்த அனுதாப அலையிலும் கூட அத்தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 244 தொகுதிகளில் மட்டுமே வென்றது, 28 தொகுதிகள் மெஜாரிட்டிக்கு குறைவு. (இந்திரா இறந்து ஏற்பட்ட அனுதாப அலையில் 410 இடங்களை காங்கிரஸ் வென்றது நினைவில் இருக்கலாம்)

2. மேலாக, இறையாண்மை கொண்ட இலங்கைக்கு இஷ்டம் போல இந்தியா அமைதிப்படை அனுப்ப முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் காலாவதியாகி.. ராஜீவின் பரம வைரியும், அமைதிப்படையை இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த பிரேமதாசா அப்போது அதிபராகி இருந்தார். பிரேமதாசா இந்தியப்படையை எதிர்க்க புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர். இப்படியாக, புலிகளின் நட்பு சக்தியாக இருந்த விபிசிங்- ஜார்ஜ் பெர்னாண்டஸ்சின் ஜனதா தளம் மீண்டும் ஆட்சிக்கு வர இருந்த வாய்ப்பையும் கெடுத்தது ராஜீவ் கொலை.

ஆகவே எல்லா கணக்குப்படியும் நஷ்டம் வரும் வேலையை புலிகள் செய்யமாட்டார்கள்.

ஒருவேளை, ஆயுதம் வாங்க பணத்திற்காக புலிகள் அந்த ராஜீவ் கொலைக்கான சர்வதேச 'சப் கான்டராக்ட்' எடுத்திருந்தாலும்.. அந்த கான்டராக்டை வழங்கியவர்களை சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி, நரசிம்மராவ் போன்றோர் மறைப்பதேன்?

ஒருவேளை, மோஸாத்திற்காகவோ, சிஐஏவிற்காகவோ அந்த கான்டராக்ட் வேலையை புலிகள் செய்திருந்தாலும்.. மோஸாத்தோ, சிஐஏவோ புலிகளை அந்த கொலைப்பழியில் இருந்து பாதுகாத்து இருக்காதா?

இவ்வாறு ஃபராஸ் அஹ்மது என்ற ஊடகவியலாளர் எழுதிய Assassination of Rajiv Gandhi: An Inside Job?' என்ற நூலிலேயும், அந்த நூல் பற்றி பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விவாதங்களிலும் நியாயப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.     


Gallery

மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், கனடா, Canada

28 Nov, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
மரண அறிவித்தல்

சுதுமலை, Toronto, Canada

24 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Scarborough, Canada

26 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை

29 Nov, 2022
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Krefeld, Germany

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025