நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு
nallur
duty
assume
executive officer
By Vanan
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.
அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் காலம் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.