கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Child Abuse Atulugama Child Murder
By Vanan May 29, 2022 10:37 AM GMT
Report

உணர்வற்ற முறையில் கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷா

களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான்கு காவல்துறை குழுக்களின் ஊடாக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

களுத்துறை பண்டாரகம, அட்டுல்கமவில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயதுச் சிறுமியின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.

இந்தக் கொடூரமான குற்றம் தொடர்பில் விரைவான நடவடிக்கையை துரிதப்படுத்துவதாகவும் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்ட அரச தலைவர் மேலும் கூறியுள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள் | Atalugama Girl Murder Police Update Cid Inquiry

உணர்வற்ற முறையில் கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதாக அரச தலைவர் கூறியுள்ளார்.

தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயதான பாத்திமா ஆயிஷா, வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்தார்.

எனினும் சிறுமி வீடு திரும்பாததை அடுத்து சிறுமியின் தாயார், பண்டாரகம காவல்துறை நிலையத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது வீட்டிற்கு அருகில் புதர்கள் நிறைந்த சேற்றுப் பகுதியில் இருந்து குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள் | Atalugama Girl Murder Police Update Cid Inquiry

உண்மைகளைக் கண்டறிய காவல்துறை தீவிர முயற்சி

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள போதிலும், குழந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் சரியான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

சிறுமியின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026