பெரும் பதற்றத்தில் கொழும்பு!! தாக்கப்பட்ட போராட்டக்காரர்கள் - நேரலை
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Independent Writer
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், பிரதமர் தற்போது பதில் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் நடைபெற்று வருவதுடன், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது கொழும்பில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்