காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல்: வெளியாகிய கண்டனம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு கடுமையாக கண்டித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Authorities must also protect the freedom of the press. Journalists must not be barred from ‘Gotagogama’. Blocking journalists from doing their jobs directly violates freedom of the press. #ProtectTheProtest
— Amnesty International South Asia (@amnestysasia) July 21, 2022
சட்டவிரோதமாக கைது
இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும், பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது, பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.