வெளிநாடொன்றில் பெருமளவு இலங்கையரை கடத்தும் முயற்சி முறியடிப்பு
வெளிநாடொன்றில் பெருமளவு இலங்கையரை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூன்று இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்புத் துறையினர் முறியடித்துள்ளனர்.
பலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக

பலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக குறித்த இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் ஜோர்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.