இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

SLPP Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sagara Kariyawasam Sri Lanka Government
By Dilakshan Feb 18, 2025 07:25 AM GMT
Report

அரசங்கத்தால் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒழித்து தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டை வட கொரியாவாக மாற்றத் தயாராகி வருவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம்சம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை இழந்து வருவதாகவும், ஜே.வி.பி மக்களை அச்சுறுத்துவதற்காக வீடுகளுக்கு குண்டர்களை அனுப்பி வருவதாகவும் சாகர காரியவம்சம் கூறியுள்ளார்.

கனடா செல்ல தயாரான யாழ். தம்பதி கைது

கனடா செல்ல தயாரான யாழ். தம்பதி கைது

அரச சேவை அரசியல்மயமாக்கம்

அத்தோடு, ஜனாதிபதியின் முதல் வரவு செலவுத் திட்டமானது, ஒரு கடதாசியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது என தெரிவித்த அவர் அது யாதார்த்தத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நாட்டிற்கு புதிய முதலீடுகள் தேவை என்றும், அரசாங்கம் ஏற்கனவே உள்ள முதலீடுகளைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை எனவும் சாகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சேவையில் உள்ள மூத்த அதிகாரிகளை நிலுவை பதவிகளுக்கு மாற்றுவதன் மூலமும், இளைய அதிகாரிகளை உயர் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலமும் அரச சேவையை முழுமையாக அரசியல்மயமாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு செய்த முதல் காரியம், அதன் தேர்தல் மேடையில் இருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளில் உயர் பதவிகளுக்கு நியமித்ததே ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அத்தோடு, அவர்கள் சட்டமா அதிபரை அச்சுறுத்தி, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அவரைப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், சட்டமா அதிபரின் அதிகாரத்தை அகற்றி, ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவ முயற்சிப்பதாகவும் சாகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இன்று நிறைவேற்றப்படாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024