ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய முயற்சி..! மர்ம நபர்களால் குண்டு வீச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் முயற்சியிலிருந்து அவா் தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் போா் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. அதற்காக, அவா் சென்ற மகிழுந்தின் மீது குண்டு வீசப்பட்டது.
புடின் காயமின்றி உயிா் தப்பினாா்

இதில் அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எனினும், அந்தக் மகிழுந்து அந்தப் பகுதியிலிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் ரஷ்ய அதிபர் புடின் காயமின்றி உயிா் தப்பினாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, புடின் மகிழுந்தில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது மகிழுந்துக்கு முன்னும் பின்னும் மற்ற மகிழுந்துகள் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர்.
மர்ம நபர்களால் குண்டு வீச்சு
அப்போது புடின் பயணித்த மகிழுந்து மீது மர்ம நபர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் புடின் சென்ற மகிழுந்தில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மகிழுந்தில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இதனால் புடின் காயமின்றி உயிர் தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.