ஜெர்மன் விமான நிலையத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ட்ரோன்! தப்பியது உக்ரைன் விமானம்
ஜெர்மனியின் விமான நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த உக்ரைன் சரக்கு விமானத்தின் அருகே வெடிப்பொருட்கள் பொருத்திய ட்ரோன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்படி குறித்த விமானத்தில் இராணுவப் பயன்பாட்டுக்கான வெடிமருந்துகள் ஏற்றப்பட்டிருந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை
இது குறித்து அந்நாட்டு காவல்துறை அறிக்கையை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட தகவலில், கண்டுப்பிடிக்கப்பட்ட ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் உயர்தர இராணுவ பயன்பாட்டுடையது என தடவியல் நிர்ணர்கள் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ட்ரோனில் தொழினுட்ப கோளாறு ஏற்றட்டதன் காரணமாகவே அது வெடிக்காமல் போனதாக சில ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெர்மனி பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
லைப்சிக்/ஹாலே விமான நிலையம் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், நேட்டோ (NATO) இராணுவ தளவாட நடவடிக்கைகளுக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது. இதனை ஜெர்மன் அரசு முக்கிய தேசிய உள்கட்டமைப்பாக அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |