வெளிநாடொன்றின் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தளபதியாக பெண் நியமனம்
நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைமைகளில் செய்யப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, தனது 125 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் இராணுவத்தை வழிநடத்துவார் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
தற்போது நாட்டின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவராகப் பணியாற்றிவரும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல்(வயது55), ஜூலை மாதம் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று அரசாங்கம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய இராணுவத்தளபதிக்கு பதிலாக நியமனம்
ஜூலை 2022-ல் அப்பதவியை ஏற்ற லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்படுவார்.

பிரதமரின் அறிவிப்பு
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "ஜூலை முதல், அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் தளபதியை நாம் கொண்டிருப்போம்" என்று கூறினார்.

அவுஸ்திரேலிய இராணுவம் தனது படையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று வரும் வேளையில் இவரது நியமனம் வந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், கோய்லின் நியமனத்தை ஒரு "மிகப்பெரிய வரலாற்றுத் தருணம்" என்று குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |