அமெரிக்காவுடன் இணைந்த அவுஸ்ரேலியா - கடும் தொணியில் வெளிவந்த சீனாவின் எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவுக்கு அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவுஸ்ரேலியா குறித்த நீர்மூழ்கி கப்பல்களை வாங்கினால் அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என சீன அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்தும் அந்த ஊடகத்தில்,
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ - பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காகவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.
அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை அவுஸ்ரேலியா வாங்குவதற்கு சீனா தனது கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை வாங்கினால் அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்றும் மேலும் எச்சரிக்கை ஒன்றும் வெளிவந்துள்து.