அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள்! புள்ளிவிபர பணியகம் தகவல்
அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 31, 000 பேர் பாலியல் நோக்குடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது. எனினும், இந்த ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன என புள்ளிவிபர பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை. இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் புள்ளிவிபர பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
டாரா ஹன்டரின் கருத்து
ஆண்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் மனைவிமார்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான பாலியல் வன்முறை வன்முறைதாக்குதல்கள் 37 வீதமான சம்பவங்கள் வீடுகளிலே இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.