பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான 8 பேருக்கு பிணை
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வெடி குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கே வவுனியா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் காவல்துறையினரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி.எச்.ஆர்.டி. நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.
இந்த நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த 8 பேரும் இன்று பதில் நீதிபதி க. தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
