உணவு வாங்கச்சென்ற மாணவி சடலமாக..!! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்(படம்)
புதிய இணைப்பு
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 9 வயது மாணவியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் காணாமல் போன அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாத்திமா ஆயிஷா (9 வயது ) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வீசியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
காணாமல்போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன மாணவி, புறக்கோட்டை பகுதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, குறித்த மாணவியை தேடுவதற்காக, சில காவல்துறை குழுக்கள், அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற விதம்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது மாணவி ஒருவர் நேற்று உணவு வாங்குவதற்காக, அருகில் உள்ள வியாபார நிலையத்திற்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
மாணவி கடையில் இருந்து வெளியேறியமைக்கான சான்றுகள் சி.சி.ரி.வி. காணொளியில் பதிவாகியுள்ள போதிலும், வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பண்டாரகம காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பண்டாரகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவி வான் ஒன்றில் கடத்தப்பட்டதாகவும், வான் ஒன்றின் இலக்கங்களும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. எனினும், இதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், சம்பவத்தில் குறிப்பிடப்படும் வாகனத்தை தாம் சோதனையிட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி - கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை |