நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவர் பசில் தான் - பொதுஜன பெரமுன
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
போலியான குற்றச்சாட்டுகள்
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்ததத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவரும் பசில் ராஜபக்ச தான் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய தலைவர் பசில் எனவும், கடந்த காலங்களில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
