சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு உறுப்பினர்களையும் இணைத்துச் சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
அகுரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று(13) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
அடுத்த கட்ட நடவடிக்கை
BASL நிர்வாகக் குழு அதே நாளில் அவசரக் கூட்டம் நடத்தியிருந்தாலும், இந்த சம்பவம் முழு சட்டத்துறையையும் பாதிப்பதாக இருப்பதால், முடிவுகளை நிர்வாகக் குழு மட்டுமே எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது முழு சட்ட சமூகத்தையும் பாதிக்கும் சம்பவம். எனவே, நாளை மாலை 3.00 மணிக்கு BASL அனைத்து உறுப்பினர்களின் சிறப்பு பொதுக்கூட்டத்தை கூட்ட தீர்மானித்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்,” என அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி ஷரானி பண்டாரநாயக்க மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்க நடவடிக்கைகள் காலத்தில் தான் இதற்கு முன் இவ்வாறான கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறை விசாரணை
சிறப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3.00 மணிக்கு கொழும்பில் உள்ள BASL செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள Dr. H.W. Jayawardena QC Auditorium மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பல விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |