நாடாளுமன்றம் வருகிறது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : ரணிலின் குடியுரிமை பறிக்கப்படுமா..!
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) இன்று(11) தெரிவித்தார்.
அறிக்கை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை விவாதித்ததாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
நேர்காணலால் வந்த வினை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)கடந்த வியாழக்கிழமை அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகளை அடுத்தே 88/90 காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை மீண்டும் பேசுபொருளாக மாறியது.
குடியுரிமையை பறிக்க பரிந்துரை
இந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்தது.
நிறைவேற்றதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் இல்லாததால் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த அறிக்கை நாடாளுமன்றுக்கு இந்த வாரம் முன்வைக்கப்படவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்