சவுதி அரேபியாவிலுள்ள சிலரின் நிதியுதவியுடன் கிழக்கிஸ்தானை உருவாக்கும் முயற்சி- அம்பலமான தகவல்கள்
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சந்தேக நபர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆமி முகைதீன் என்ற நபரின் பெயரில் ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் சுமார் 30 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏறாவூர் பற்று புன்னைக்குடா பிரதேசத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் கிழக்கில் தான் என்ற தனி இஸ்லாமிய இராட்சியத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் அரச, தனியார் காணிகளை அரபு நாடுகளின் நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கொள்வனவு செய்து வந்தனர்.
குறித்த சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சித்த மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் அவரது வீட்டில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல ஆதாரங்கள் வெளிவந்தன.
இந்நிலையில், தற்போது கிழக்கிஸ்தான் இஸ்லாமிய இராட்சியத்திற்காக ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் காணிகளை சவுதி அரேபியா நாட்டில் உள்ள சிலரது நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கொள்வனவு செய்துள்ள நபர்கள் குறித்த பல தகவல்கள் அடங்கிய விபரங்களை பாதுகாப்பு தரப்புக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் பற்றிய விசாரணைகளை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர். குறித்த சட்டவிரோத காணி அபகரிப்புக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை அனுமதி வழங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. புன்னைக்குடா பிரதேசத்தில் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய காணி மாபியாக்கள் கடந்த சில நாட்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் அரச காணிகளை ஊடறுத்து கிரவல் வீதிகளை அமைத்து வருகின்றனர்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை எல்லைக்குள் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தாது அரச உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனிநபர் ஒருவர் பிரதேச சபை அனுமதி இன்றி போலி உறுதிகளை காட்டி கிரவல் வீதிகளை அமைத்து வருகின்றார் ஆனால் இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.




