மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம் : காவல்துறை, இராணுவம் குவிப்பு
Batticaloa
SL Protest
Sri Lanka Violence 2022
By Vanan
மட்டக்களப்பு - ஏறாவூரில் காவல்துறையினர் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் மற்றும் அவரது வீடு, அத்துடன், அவரது தம்பியின் உணவனம் என்பன ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனால், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு தரப்பினர் வரவழைக்கப்பட்டதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஒரு பகுதியாகவே தற்போது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காவல்துறை மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்