மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Batticaloa Sri Lanka Law and Order
By Bavan Jan 31, 2026 06:25 PM GMT
Report

மட்டக்களப்பில் யுவதி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி காவல்துறை பிரிவைச் சேர்ந்த 24 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (30-01-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே சந்தேகநபரான சட்டத்தரணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன நிலையில் யாழ் இந்துக்கல்லூரி...!

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன நிலையில் யாழ் இந்துக்கல்லூரி...!

யுவதி தனிமை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி 2023 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியின் காரியாலயத்தில் வாராந்தம் 3,000 ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

2025 செப்டம்பர் மாதம் சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்த முயன்றபோது யுவதி அதற்கு இடங்கொடுக்கவில்லை.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

இருப்பினும், கடந்த ஒக்டோபர் மாதம் யுவதி தனிமையில் இருந்தபோது சட்டத்தரணி வழங்கிய மதிய உணவு பார்சலை உட்கொண்டதையடுத்து மயக்கம் ஏற்படவே, அவரை காரியாலயத்தில் இருக்கும் ஓர் அறையில் வைத்து விருப்பம் இன்றி சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, யுவதியின் சம்பளம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில், நடந்த கொடுமையை எவருக்கும் தெரிவிக்காமல் யுவதி வேலையிலிருந்து நின்றுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

பொருளாதார நிலை

இதன்பின், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக அவரது சகோதரி அங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 2025 டிசம்பர் 28 அன்று சட்டத்தரணி ஒருவரைத் திருமணம் முடித்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

திருமணமான ஒரு வாரத்தில் யுவதி மயக்கமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் 12 வாரங்கள் கொண்ட (3 மாதம்) கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் கணவன் பிரிந்து சென்ற நிலையில், தேசிய சிறுவர்கள் பெண்கள் அமைச்சின் முறைப்பாட்டின் பேரில் யுவதி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து, காத்தான்குடி காவல்துறையினர் கடந்த 29 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்ததுடன், நேற்ற சட்டத்தரணியைக் கைது செய்துள்ளனர்.

யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு

மேலதிக விசாரணை

இந்தநிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று மாலை ஐந்து மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது இருதரப்பு சட்டத்தரணிகளும் நீண்ட வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து எதிராளி தரப்பு சட்டத்தரணி எம்.ஐ.இயாஸ்டீன் கருத்துத் தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அது சட்டப்படி குற்றம் கிடையாது எனவும், மூன்று மாதம் கழித்துச் செய்யப்பட்ட முறைப்பாடு என்பதால் மேலதிக விசாரணைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

இருப்பினும், வழக்கை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதியைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். இந்துக் கல்லூரி அடிப்படை உரிமை மீறல் வழக்கு: நீதிமன்றின் உத்தரவு

யாழ். இந்துக் கல்லூரி அடிப்படை உரிமை மீறல் வழக்கு: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026