மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Batticaloa Sri Lanka Law and Order
By Bavan Jan 31, 2026 06:25 PM GMT
Report

மட்டக்களப்பில் யுவதி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி காவல்துறை பிரிவைச் சேர்ந்த 24 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (30-01-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே சந்தேகநபரான சட்டத்தரணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன நிலையில் யாழ் இந்துக்கல்லூரி...!

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப்போன நிலையில் யாழ் இந்துக்கல்லூரி...!

யுவதி தனிமை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி 2023 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியின் காரியாலயத்தில் வாராந்தம் 3,000 ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

2025 செப்டம்பர் மாதம் சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்த முயன்றபோது யுவதி அதற்கு இடங்கொடுக்கவில்லை.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

இருப்பினும், கடந்த ஒக்டோபர் மாதம் யுவதி தனிமையில் இருந்தபோது சட்டத்தரணி வழங்கிய மதிய உணவு பார்சலை உட்கொண்டதையடுத்து மயக்கம் ஏற்படவே, அவரை காரியாலயத்தில் இருக்கும் ஓர் அறையில் வைத்து விருப்பம் இன்றி சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, யுவதியின் சம்பளம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில், நடந்த கொடுமையை எவருக்கும் தெரிவிக்காமல் யுவதி வேலையிலிருந்து நின்றுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

பொருளாதார நிலை

இதன்பின், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக அவரது சகோதரி அங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 2025 டிசம்பர் 28 அன்று சட்டத்தரணி ஒருவரைத் திருமணம் முடித்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

திருமணமான ஒரு வாரத்தில் யுவதி மயக்கமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் 12 வாரங்கள் கொண்ட (3 மாதம்) கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் கணவன் பிரிந்து சென்ற நிலையில், தேசிய சிறுவர்கள் பெண்கள் அமைச்சின் முறைப்பாட்டின் பேரில் யுவதி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து, காத்தான்குடி காவல்துறையினர் கடந்த 29 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்ததுடன், நேற்ற சட்டத்தரணியைக் கைது செய்துள்ளனர்.

யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு

மேலதிக விசாரணை

இந்தநிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று மாலை ஐந்து மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது இருதரப்பு சட்டத்தரணிகளும் நீண்ட வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து எதிராளி தரப்பு சட்டத்தரணி எம்.ஐ.இயாஸ்டீன் கருத்துத் தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அது சட்டப்படி குற்றம் கிடையாது எனவும், மூன்று மாதம் கழித்துச் செய்யப்பட்ட முறைப்பாடு என்பதால் மேலதிக விசாரணைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Batticaloa Lawyer Remanded Over Abuse Charge

இருப்பினும், வழக்கை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதியைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். இந்துக் கல்லூரி அடிப்படை உரிமை மீறல் வழக்கு: நீதிமன்றின் உத்தரவு

யாழ். இந்துக் கல்லூரி அடிப்படை உரிமை மீறல் வழக்கு: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024