மட்டக்களப்பில் பலத்த மழைக்கு மத்தியிலும் கைதான இருவர்
police
Batticaloa
Arrest
By Vasanth
மட்டக்களப்பில் தற்போது பெய்துவரும் பலத்த மழைக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூபா 300,000, எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இரண்டு முச்சக்கர வண்டிகள் கடத்தல்காரர்களால் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன, அவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்